×

தஞ்சையில் ரவுடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 ரவுடிகள் கைது

தஞ்சை, பிப்.12: தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.தஞ்சை அருகே பர்மா காலனியில் முன்விரோதம் காரணமாக ரவுடிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முக்கிய ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலமானது. இதையடுத்து எஸ்.பி.ரவளிப்ரியா உத்தரவின்பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர்கள் உமாசங்கர், கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 2 ரவுடிகளை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து பட்டாகத்தி மற்றும் அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் 2 ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் தஞ்சை அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த குமார் மகன் சூர்யா(24), பர்மா காலனி 4ம் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் தமிழ்வாணன்(26) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், அதேபோல் தமிழ்வாணன் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் இப்பிரச்னையில் அதே பகுதியை சேர்ந்த செந்தில், விக்கி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவசி தேடி வருகின்றனர்.


Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...